News January 23, 2025
ஆண்டிபட்டி: லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஆண்டிபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அரசு மருத்துவமனை அருகே நின்றிருந்த கொப்பையம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (51) என்பவரை விசாரணை செய்தபோது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 24 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1500 பணம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 25, 2025
தேனியில் 100 -ஐ தொட்ட தக்காளி விலை

பெரியகுளம் சந்தையில் தினமும் 5 டன்னிற்கும் அதிகமாக தக்காளி விற்பனையாகும். தற்போது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 2 தினங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 70 என விலை உயர்ந்தது. தற்போது பெங்களூருவிலிருந்து ‘சாகோ’ என்ற ரகம் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு அவை கிலோ 100 என விற்பனை செய்யப்படுகிறது.
News November 25, 2025
தேனி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <
News November 25, 2025
தேனி: ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (38). இவருக்கும் இவரது கணவருக்கும் நேற்று முன் தினம் குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சாந்தி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.24) அவர் அப்பகுதியில் உள்ள வராக நதி ஆற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


