News April 17, 2024
ஆண்டிபட்டி அருகே ஒருவர் பலி

முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் தனிக்கொடி. இவர் வீட்டின் அருகே தனி தகர செட்டில் தங்கி இருந்தார். கடந்த 14 ஆம் தேதி அவர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தடுமாறி கீழே விழுந்து பாறையில் மோதியதில் தலையில் காயமடைந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 7, 2025
தேனி: மகளிர் உரிமைத் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தேனி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <
News December 7, 2025
கொடி நாள் நிதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

அனைத்து பகுதிகளிலும் முப்படை வீரர் கொடி நாள் இன்று 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தேனி மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கொடி நாள் நிதிக்கு தனது நன்கொடையை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


