News October 23, 2024

ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் துவக்கம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Similar News

News December 19, 2025

BREAKING விருதுநகரில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்

image

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ.4 அன்று தொடங்கி டிச.14 வரை நடைபெற்றது. இதனையடுத்து சற்றுமுன் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டார். இதில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 16,26,485 வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR க்கு பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆக 14,36,521 ஆக உள்ளது. இதில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

News December 19, 2025

ஶ்ரீவி.,: பணம் மோசடி புகார்: கே.டி.ஆர் வழக்கு ஒத்திவைப்பு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜன.5.க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

விருதுநகர்: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!