News October 23, 2024

ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் துவக்கம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Similar News

News January 3, 2026

விருதுநகர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

விருதுநகர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News January 3, 2026

விருதுநகர்: 7th படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு

image

விருதுநகர் அருகே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அருகில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 7th படித்து வருகிறார். அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 3, 2026

விருதுநகர்: கட்டட வேலை பார்த்தவர் பரிதாப பலி

image

விருதுநகர் அடுத்த சூலக்கரைமேடைச் சேர்ந்தவர் முருகன் 31. இவர் கட்டடங்களுக்கு சென்ட்ரிங் பலகை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று சூலக்கரையில் காலை 11:30 மணிக்கு ஒரு வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் போது இணைப்பு மின் ஒயரில் சுத்தியல் பட்டு மின்சாரம் தாக்கி பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!