News October 23, 2024

ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் துவக்கம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Similar News

News December 9, 2025

விருதுநகர் கலெக்டர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர் பிரிவை சார்ந்த மாணவ மாணவியர்கள் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க:http://umis.tn.gov.in

News December 9, 2025

விருதுநகர்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

விருதுநகர்: இளைஞருக்கு ஆயுள் தண்டனை 

image

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் வடகாசி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரும், அதே பகுதியை சேர்ந்த மாடசாமியும் லோடுமேன் வேலை செய்து வந்தனர். இருவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2020-ம் ஆண்டு மாடசாமி இசக்கிமுத்துவை அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி மாடசாமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!