News April 22, 2025

ஆட்டோ ‘சைடு மிரர்’ உடைந்து கழுத்தை கிழித்ததில் பெண் பலி

image

மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் 36. நேற்று மாலை ஷேர் ஆட்டோவில் மகபூப்பாளையம் பகுதியில் செல்லும் போது அவர் வந்த ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதி விபத்தானது. அதில் ஆட்டோவின் ‘சைடு மிரர்’ உடைந்து, அதைச் சுற்றி இருந்த தகடு ‘கட்’ ஆகி, ஆட்டோவில் இருந்த மாரியம்மாள் கழுத்தை கிழித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவில் பயணம் செய்வோருக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்லுங்க.

Similar News

News November 27, 2025

மதுரையில் மூச்சுத் திணறி இளம்பெண் பலி.!

image

மதுரை தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்தவர்கருப்பசாமி மனைவி காவியா (20). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 27, 2025

மதுரையில் 12 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

மதுரை நகர் உள்பட தென் மாவட்டங்களில் பணியாற்றும் 12 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களான கூடல் புதூர் காசிராஜன், திருநகர் விமலா, ஜெய்ஹிந்த்பும் மகேஷ் குமார், தெப்பக்குளம் கீதாலட்சுமி ஆகியோர் நெல்லை, மதுரை, ராமநாதபுரம் சரகங்களுக்கு நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றபட்டுள்ளனர். கன்னியாகுமரி சரவணன் சேரன்மாதேவி மாரீஸ்வரி உள்ளிட்டோர் மதுரைக்கு இடமாற்றபட்டுள்ளனர்.

News November 27, 2025

மதுரையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டி

image

மதுரை மாவட்டத்தில் பரவை பிரதான சாலையில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி கல்லூரி வளாகத்தில் மிஸ்டர் மதுரை ஆணழகன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த காவலர் பாலமுருகன் பட்டம் வென்றார். அவருக்கு விருதும், சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!