News February 12, 2025
ஆட்டுக் கொட்டகையில் பதுங்கியிருந்த நாகப்பாம்பு

கொள்ளிடம், தைக்கால் கிராமத்தில் ராஜ்குமார் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்த ஆட்டுக்கொட்டகையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்த பாம்பு பிடி வீரர் பாண்டியன் ஆட்டுக் கொட்டகைக்குள் ஒளிந்திருந்த ஐந்தடி நீளம் உள்ள கோதுமை நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
Similar News
News April 20, 2025
மயிலாடுதுறையில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 42 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<
News April 20, 2025
மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் எண்கள்

கோடைக்காலம் நெருங்கும் நிலையில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும்.
▶ தீயணைப்பு நிலையம், குத்தாலம் – 04364234101,
▶ தீயணைப்பு நிலையம், மணல்மேடு – 04364254101,
▶தீயணைப்பு நிலையம், சீர்காழி – 04364270101,
▶ தீயணைப்பு நிலையம், மயிலாடுதுறை – 04364222101. ஷேர் பண்ணுங்க.
News April 20, 2025
மயிலாடுதுறையில் பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்எஸ்யுஆர்பி இலவச பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களது சுய விபரங்களை studycircledeomayil@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க