News September 13, 2024
ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்ட முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் லட்சுமிபவ்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 17 ஆம் தேதி நடைபெறவிருந்த முகாம் அன்று மிலாது நபி அரசு விடுமுறை என்பதால் 16ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 16, 2025
வரும் 21ல் நாதக சார்பில் கண்டன போராட்டம்!

நீலகிரி கூடலூர் முழுவதும் வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிர் மற்றும் உடைமைகள் இழப்புகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது. வரும் (செப். 21) ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கூடலூர் காந்தி திடலில் இந்த தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் கூடலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
News September 16, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி வட்டம் தும்மனாட்டி பகுதிக்கான முகம் கெந்தோரை அருகே உள்ள சமுதாய கூடத்திலும் நடைபெறுகிறது. பொது மக்கள் தங்கள் பகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முகாம்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
நீலகிரி யானை வழித்தட கட்டடங்கள் இனி இடிக்கப்படும்!

நீலகிரி மாவட்டம் மசினகுடி சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள 39தங்கும் விடுதி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். யானைகள் வழித்தடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற 2008ல் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2018ல் 39 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அக்கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது.