News April 14, 2024
ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் எல்.ஆர்.ஜி மகளிர் கலை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஜூன் 4-ஆம் தேதி அங்கேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News November 13, 2025
திருப்பூர் இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் மற்றும் அவினாசி பகுதிகளில், இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம். உங்கள் பகுதியில் குற்றம் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும். அவசர உதவிக்காக 108 ஐ அழைக்கவும்.
News November 13, 2025
திருப்பூர்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
பல்லடம் அருகே 2 பெண்கள் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமி கவுண்டம்பாளையம் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தனுஸ்ரீ. 21 வயதான இவர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபோல் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த வேம்பரசி என்பவர் கால் வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


