News January 22, 2025
ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 24.01.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காண, ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News November 16, 2025
ஆம்பூர் அருகே தனியார் கல்லூரி வாகனம் மீது கார் மோதி விபத்து

ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் செல்லும் நிலையில், நேற்று (நவ.15) ஆம்பூரில் இருந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் பின்பக்கம் கார் மோதி விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
News November 16, 2025
ஜோலார்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை முயற்சி

ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தீபன் இவர் குடும்பம் பிரச்சினை காரணமாக இன்று (நவ.15) தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை அருகில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 16, 2025
ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்களும் விவரங்களும்

இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளது ரோந்து பணியானது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது பொதுமக்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்


