News January 22, 2025
ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 24.01.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காண, ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர் குறைத்தீர்வு கூட்டத்தில் 363 மனுக்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.1) மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிடமிருந்து பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை 363 மனுக்களை ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
News December 1, 2025
திருப்பத்தூரில் நாளை தாயுமானவர் திட்டம் துவக்கம்

திருப்பத்தூர் மாவட்டம்(டிச.01) முதலமைச்சரின் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் நேரடியாக அத்தியாவசிய குடிமைப் பொருட்களை விநியோகம் செய்யப்பட உள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமானது நாளை (டிச.2 மற்றும் டிச.3 )ஆகிய இரு தினங்களில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
News December 1, 2025
பத்தர் மக்களே இது உங்களுக்காக தொடர்ந்து பணி விவரம் நம்பரை நோட் பண்ணுங்க

இன்று 01.12.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களும் தொலைபேசி எண்களும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது இந்நேரத்தில் பொது மக்களுக்கு புகார் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம்


