News November 25, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி

image

சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். நிலப் பிரச்சனை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

Similar News

News December 2, 2025

சேலம்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

சேலம் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<> CLICK HERE<<>>.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 2, 2025

சேலம் அரசு பள்ளி மாணவன் சாதனை!

image

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன் கபிலன், தமிழக அணியில் கலந்து கொண்டு 56 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சேலம் மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News December 2, 2025

சேலத்தில் கடன் தொல்லையால் நேர்ந்த சம்பவம்!

image

சேலம் அம்மாபேட்டை மாருதிநகர் 3வது கிராஸ் பகுதியில் வசிக்கும் சரவணன் (42) சலவை தொழில் செய்து வந்தார். ரூ.3 லட்சம் கடன் பிரச்சனையால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!