News August 16, 2024
ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
விருதுநகர்: மாறி மாறி அரிவாளால் தாக்கிக் கொண்ட கொடூரம்..!

சிவகாசி பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி அவரது குடும்பத்திற்கு பணம் தராமல் உறவினர்களுக்கு செலவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவரது மகன் சுதாகர் கருத்தப்பாண்டியின் உறவினர்களான சந்தோஷ், சந்தியா ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சந்தோஷ், சந்தியா உள்ளிட்ட 4 பேர் சுதாகரை மீண்டும் அரிவாளால் தாக்கினர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News September 16, 2025
விருதுநகரில் ரூ.50 ஆயிரத்தில் வேலை வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற செப். 19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிறுவனங்களில் 737 காலிப்பணியிடங்கள் உள்ளன. 15,000 – 50,000 வரை சம்பளம் வழங்கப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு <
News September 15, 2025
விருதுநகர்: மாநிலத்திலேயே மூன்றாவது இடம்

மாநிலத்திலேயே அதிக உடல் உறுப்புகள் தானம் பெற்ற மருத்துவமனைகளில் விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனை கல்லூரிகளில் விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. மேலும் கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் இங்கிருந்து வழங்கப்பட்டதில் ஏராளமான நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.