News August 16, 2024
ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் “அறிவும் வளமும்” என்ற பொருண்மையின் கீழ் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று(16.11.2025) பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
News November 16, 2025
விருதுநகர்: போக்சோவில் 11-ம் வகுப்பு மாணவன் கைது

நரிக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார், சிறுவனை மதுரை சிறார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 16, 2025
விருதுநகர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


