News August 16, 2024
ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
விருதுநகர்: வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

நத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (38). இவரது மனைவி வைதேகி. இவர்களது 2-வது குழந்தை கிருத்வீகா முத்ரா(2)வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வைதேகி பால் வாங்க சென்றிருந்தார். அப்போது குழந்தை கிருத்வீகா முத்ரா பாத்ரூமில் உள்ள தண்ணீர் வாளியில் விளையாடிய போது, தண்ணீரில் தலைகுப்புற விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்
News November 27, 2025
விருதுநகர்: சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள்

சேத்துாரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக வந்த புகாரை அடுத்து போலீசார் ரோந்து செய்தனர். அதில் தளவாய்புரம் பகுதி அருகே நான்கு பேரிடம் சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் கல்லுாரி மாணவர்கள் தளவாய்புரம் மு.வினோத்குமார் 19, முகவூர் பி.வினோத்குமார், சதீஷ்குமார், முத்துச்சாமி புரத்தை சேர்ந்த இளைஞர் அன்பு ராஜ் 23, நான்கு பேர் என தெரிந்து கைது செய்தனர்.
News November 27, 2025
விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி ஆய்வு

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மதுரை சரக டிஐஜி அபிநவ்குமார் வந்திருந்தார். அப்போது அவர் அமைச்சுப் பணியாளர்கள் கையாளும் போலீசாரின் சம்பள பட்டியல், பொருட்கள் வாங்கப்பட்டவை, போலீசாரின் போக்குவரத்து பயணப்படி ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து டிஐஜி காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.


