News June 20, 2024

ஆட்சியரிடம் மனு அளித்த எம்எல்ஏ

image

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 கீழ் ஜெயங்கொண்டம் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கடிதத்தினை வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குனர் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News April 21, 2025

விக்கிரமங்கலம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உல்லியக்குடியைச் சேர்ந்தவர் சரோஜா(80). இவர் தனது வீட்டின் வாசலில் இருந்தபோது, அந்த வழியாக சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டி சரோஜா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த வெண்மான் கொண்டான் வடக்கு தெருவை சேர்ந்த சரத்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.

News April 20, 2025

அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

image

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 20, 2025

அரியலூர்: கடன் பிரச்னையை தீர்க்கும் பைரவர்

image

அரியலூர் மாவட்டம் தா. பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கால பைர்வர் சன்னதி அமைந்துள்ளது. பைரவர் சன்னதியில் கடன் பிரச்னை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்னையில் அவதிப்படும் உங்கள் நண்பகள் மற்றும் உறவினர்களுக்கு SHAREபண்ணுங்

error: Content is protected !!