News April 18, 2024
ஆட்சியரிடம் புகார் அளித்த பாஜக மாவட்ட செயலாளர்

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், இன்று (ஏப்ரல்.18) கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து புகார் அளித்தனர்.
Similar News
News April 20, 2025
9-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி

தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(22) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவி கர்ப்பமான நிலையில் பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. விசாரணையில், மாணவிக்கு வயது 16 என தெரியவந்ததை அடுத்து, பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
News April 20, 2025
கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 20, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (19.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.