News August 4, 2024
ஆடி அமாவாசை முன்னிட்டு ஒகேனக்கலில் குளிக்க தடை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, நீர் நிலைகளில் குளித்து வருவது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வருகை புரிந்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
தருமபுரி: அதிரடி காட்டிய வனச்சரக அலுவலர்!

மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்துக்கு கிடைத்த தகவலின் படி, வன அலுவலர்கள் நேற்று காலை செல்லம்பட்டி பீட் காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பொய்யப்பட்டியை சேர்ந்த சந்திரன் (62) சந்திரகாந்த் (42) ஆகியோர் அவர்களது நிலத்தில், மின்சாரம் பாய்ச்சி, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, இருவருக்கும் தலா ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
News November 12, 2025
இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூரில் நிற்கும்!

சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (12695, 12696) மொரப்பூரில் நின்று செல்ல பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், தம்பிதுரை எம்பி மத்திய ரயில்வே அமைச்சருக்கு பரிந்துரை செய்ததன் பேரில், இனி மொரப்பூர் ஸ்டேஷனில் நின்று செல்வதற்கு மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
News November 12, 2025
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.


