News August 3, 2024

ஆடிப்பெருக்கு: 9 இடங்களில் சேலம் ஆட்சியர் அனுமதி

image

ஆடிப்பெருக்கு விழாவை ஓட்டி பொதுமக்கள் பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, கிழக்குக்கரை வாய்க்கால், ஓனம் பாறைகால்வாய், நெடுங்குளம் மாம்பாடியூர், வெள்ளரி வெள்ளி பவளத்தார் மோரி, கொளத்தூர், செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி, சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்ஜிஆர் பாலம், திப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

கெங்கவெல்லி அருகே நண்பர்கள் 2 பேர் பலி!

image

கெங்கவெல்லி அருகே தம்மம்பட்டி கோனேரிப்பட்டியை சேர்ந்த நண்பர்கள் ஷாஜகான் மற்றும் அரவிந்த். இருவரும்நேற்று இரவு, கொண்டையம் பள்ளிக்கு பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். கோனேரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரி பின்பகுதியில், பைக்கை மோதியுள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 26, 2025

சேலம்: அதிமுக பிரமுகர் கைது பரபரப்பு

image

சேலம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சங்கர் என்கிற சேகோ சங்கர். இவர் ஆத்தூர் கோரி தெரு மல்லிகா கண்ணன் திருமண மண்டபம் அருகில் வசித்து வரும் திவ்யா என்கிற பாத்திமா என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இன்று அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கரை ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

News November 26, 2025

சேலம் அருகே ஜேசிபி மோதி பலி!

image

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) கடந்த 22ஆம் தேதி டூ-வீலரில் அயோத்தியாப்பட்டணம் நோக்கி சென்ற போது, வான்ராயன் காடு மேடு அருகே முன்பிருந்த ஜேசிபி திடீர் பிரேக் அடிப்பதால், அதன் பக்கெட் அவரது தலையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!