News August 3, 2024

ஆடிப்பெருக்கு – இந்த இடங்களில் குளிக்க தடை

image

ஆடிப்பெருக்கு விழா இன்று ( ஆக.3) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம், அம்மா மண்டபங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் படித்துறை இல்லாத பகுதிகளில் பொதுமக்கள் இறங்குவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படித்துறை இல்லாத 52 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 3, 2025

திருச்சி: ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

image

திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் பிலால் (46). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு காந்தி மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். தலைமை தபால் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

News December 3, 2025

திருச்சி: தாயை வெட்டிய மகன் கைது

image

முசிறி அடுத்த அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி பாப்பா (50). சம்பத்தன்று இவரது இளைய மகன் சுதாகர் தனது தாயிடன் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதையடுத்து அவரது இடது கை கட்டை விரலை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

News December 2, 2025

திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

image

திருச்சியைச் சேர்ந்த ஐசக் நியூட்டன் என்பவர் அமேசானில் மினி புரொஜெக்டர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டீ-சர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசக் நியூட்டன் திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐசக் நியூட்டனுக்கு ரூ.25,000, நீதிமன்ற செலவுகளுக்கு ரூ.10,000 என ரூ.35,000 அமேசான் நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!