News August 8, 2024
ஆடிப்பூரம் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் புதன்கிழமை ஆடிப்பூரம் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அம்மனின் அலங்காரத்தை காண கோடி கண்கள் வேண்டும் என்பதை பக்தர்கள் உணர்ந்த தருணமாக இருந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Similar News
News September 16, 2025
தி.மலை: மக்கள் குறைதீர் கூட்டத்தில் 554 மனுக்கள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 554 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
News September 16, 2025
தி.மலை: சொகுசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து!

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் இன்று (செப்.,16) தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News September 16, 2025
தி.மலை: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <