News August 7, 2024
அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டார். பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்., பொது செயலாளராக இருந்துள்ளார். இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருள் உடன் தொடர்பில் இருந்துள்ளார். இதுகுறித்து, அவரிடம் போலீசார் கடந்த 3 நாட்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
Similar News
News September 15, 2025
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கும், விசிக நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 22-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் உள்ள அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News September 15, 2025
சென்னையில் வெறி நாய் கடித்த நபர் உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் ரேபிஸ் தாக்கி, சிகிச்சை பலனின்றி முகமது நஸ்ருதின் என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை மார்கெட் அருகே அவரை தெருநாய் கடித்துள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 12ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட, ரேபிஸ் தொற்று அவரை தாக்கியிருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 14, 2025
சென்னையில் அன்புக்கரங்கள் திட்டம் நாளை தொடக்கம்

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை சென்னையில் நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் ’அன்புக்கரங்கள் திட்டம் பள்ளிப்படிப்பு முடித்த பின் கல்லூரிக் கல்வி, உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.