News September 27, 2024
அவர் தான் துணிச்சலானவர்: சைஃப் அலி கான்

நேர்மையான, துணிச்சலான அரசியல்வாதி ராகுல் என நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார். எதிர்மறை விமர்சனங்களை கடின உழைப்பால் சுவாரஸ்யமாக மாற்றியவர் ராகுல் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் எதிர்காலம் அவர்தான் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக டிவி நிகழ்ச்சியில், மோடி, ராகுல், கெஜ்ரிவாலில் துணிச்சலான அரசியல்வாதி யார் என சைஃப்பிடம் கேட்கப்பட்டது. நீங்க யாரை நினைக்கிறீங்க? Cmd Here.
Similar News
News December 9, 2025
தெரு நாய்க்கடி.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தெரு நாய்க்கடி தொடர்பாக பள்ளிகளுக்கு அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு உரிய ஆலோசனை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு உணவு தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
ஈரோடு பொதுக்கூட்டத்துக்கான தேதியை மாற்றிய தவெக

ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு 84 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதியில் இருந்து, டிச.18-ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், 25,000 பேர் வரை அதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 9, 2025
ECI-ஐ வைத்து ஜனநாயகத்தை சிதைக்கும் மத்திய அரசு: ராகுல்

உடனே SIR பணிகளை நிறுத்த வேண்டும் என லோக் சபாவில் நடத்த விவாதத்தில், ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும் பிரேசில் மாடல் போட்டோ இந்திய வாக்காளர் பட்டியலில் வந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். ஜனநாயகத்தை சிதைப்பதற்காக ECI-ஐ பயன்படுத்துகிறது மத்திய அரசு என்றும் அவர் விமர்சித்துள்ளார். அனைத்து இந்திய அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


