News September 27, 2024
அவர் தான் துணிச்சலானவர்: சைஃப் அலி கான்

நேர்மையான, துணிச்சலான அரசியல்வாதி ராகுல் என நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார். எதிர்மறை விமர்சனங்களை கடின உழைப்பால் சுவாரஸ்யமாக மாற்றியவர் ராகுல் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் எதிர்காலம் அவர்தான் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக டிவி நிகழ்ச்சியில், மோடி, ராகுல், கெஜ்ரிவாலில் துணிச்சலான அரசியல்வாதி யார் என சைஃப்பிடம் கேட்கப்பட்டது. நீங்க யாரை நினைக்கிறீங்க? Cmd Here.
Similar News
News December 21, 2025
10 வருஷம் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியலையா?

வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பலர் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். கள்ள ஓட்டு தொடர்பான <<18619007>>நயினார் நாகேந்திரனின்<<>> கருத்துக்கு பதிலளித்த அவர், 10 வருடமாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது, இந்த கள்ள ஓட்டுகள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்போது நல்ல ஓட்டாக இருந்தது இப்போது கள்ள ஓட்டாகிவிட்டதா எனவும் கேட்டுள்ளார்.
News December 21, 2025
சாதி, மத உணர்வுகளை தூண்டுவது ஆபத்தானது: திருமா

மதுரையை சனாதன மையமாக மாற்ற பார்ப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், சனாதன எதிர்ப்பே உண்மையான தமிழ் தேசியம் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் எச்சரித்துள்ளார்.
News December 21, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. வெளியான ஹேப்பி நியூஸ்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாமாயிலுக்கு வழங்கப்படுவதைப்போல், தேங்காய் எண்ணெய்க்கு ₹100 மானிய தொகை வழங்கினால் விலை குறையும் என்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்வது குறித்து CM ஸ்டாலினிடம் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார்.


