News April 3, 2025
அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 18, 2025
தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்டம் மேக்கரையில் 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 32.50அடி ,72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை நீர்மட்டம் 25 . 92 அடி ,36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 24 அடி , 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 54 அடி .85 முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 52 அடி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
News April 18, 2025
ஆலங்குளத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரியில் கோடை கால விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம், விளையாட்டு போட்டிகள் ஏப்.21 முதல் மே 5 வரை நடைபெறவுள்ளது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கபடி, கைப்பந்து, கிரிக்கெட் இலவசமாக பயிற்சியளிக்கப்படவுள்ளது. 63691107840, 9585713337, 9486511103 என்ற எண்ணில் முன்பதிவு செய்திடும் படி கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 18, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்ட பி. எம். கிசான் திட்டவிவசாயிகள், இதர விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான திட்டங்களின் பயன்களை எளிதாக பெற ஆதார் எண் , நில உடைமை விபரங்களை சரிபார்த்து தனி அடையாள எண் வழங்க கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது ஏப்.30 க்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் உரிய விபரங்களை கொடுத்து பதிவு செய்ய ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ள