News April 3, 2025

அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

image

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 5, 2026

தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தென்காசி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

சங்கரன்கோவிலில் திடீர் போக்குவரத்து மாற்றம்

image

சங்கரன்கோவில் – ராஜபாளையம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடை பெறுகிறது. எனவே இன்று (ஜன.5) இரவு முதல் நாளை (ஜன.6) காலை வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவி., கம்பம், குமுளி செல்லும் வாகனங்கள் புளியங்குடி, அச்சம்பட்டி வழியாக செல்லவும், ஸ்ரீவி. ராஜபாளையம் வரும் வாகனங்கள் களப்பாகுளம் வழியாக சங்கரன்கோவில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 5, 2026

தென்காசி: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

தென்காசி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!