News August 2, 2024

அறந்தாங்கியில் மின்மாற்றியை துவக்கி வைத்த அமைச்சர்

image

அறந்தாங்கி அடுத்த மறமடக்கி ஊராட்சியில் பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆற்றங்கரை பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியின் செயல்பாட்டை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மின்சார துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 22, 2025

புதுகை: பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜலெட்சுமி(45). புதுகையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் இவர். வியாழன் இரவு பேருந்தில் ஊருக்கு சென்றுள்ளார். பேருந்திலிருந்து இறங்கி ஊருக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 22, 2025

புதுவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா தேனூர் அருகே தச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் மாதீஷ்(16). இவர் தச்சம்பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 21/11/2025 ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 22, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (நவ.,21) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள். இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!