News August 2, 2024
அறந்தாங்கியில் மின்மாற்றியை துவக்கி வைத்த அமைச்சர்

அறந்தாங்கி அடுத்த மறமடக்கி ஊராட்சியில் பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆற்றங்கரை பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியின் செயல்பாட்டை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மின்சார துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 26, 2025
புதுக்கோட்டை: வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

புதுகை அருகே வட்டாபட்டாபட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன் நமணசமுத்திரம் சாலையோரம் படுகாயத்துடன் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், நிதீஷ்குமார் ஆகியோரை நமணசமுத்திரம் போலீசார் கைது செய்தனர்.
News November 26, 2025
JUST IN புதுக்கோட்டை: கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணு
News November 26, 2025
புதுகை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

கார்த்திகை தீபம் விழா அடுத்த மாதம் டிச.3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக திருநெல்வேலி – திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


