News December 4, 2024
அரையாண்டு தேர்வு குறித்து அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் பெஞ்சல் புயல் மழை காரணமாக கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெள்ளம் பாதித்த 15 மாவட்ட கல்வி அலுவர்களுடன் நேற்று ஆலோசனை செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தால், அந்த தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
கிருஷ்ணகிரி: நுகர்வோர் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: எரிவாயு உருளைகள் பதிவு, விநியோகம் மற்றும் புகார் தொடர்பான அக்டோபர் 2025 நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், வரும் வியாழக்கிழமை (அக்.31) மாலை 3:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
மழைக் காலங்களில் செய்ய வேண்டியவை – ஆட்சியர் அறிவுரை

கிருஷ்ணகிரி: மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும், தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும், உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
மழைக் காலங்களில் செய்ய கூடாதவை – ஆட்சியர் அறிவுரை

கிருஷ்ணகிரி: மழைக்காலங்களில் செய்யகூடாதவை குறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மின் மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம், மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் மின்வாரியத்திற்கு தெரிவிக்கவும், இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, கணினி, செல்போன் மிக்சி, கிரைண்டரை பயன்படுத்த வேண்டாம் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


