News August 8, 2024
அரூர் அரசு கல்லூரியில் இன்று 3ஆம் கட்ட கலந்தாய்வு

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர, இணைய வழியில் விண்ணப்பித்து அதற்கான இரண்டு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்தன. இந்நிலையில், பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து உடனடித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்காமல் நேரடியாக கல்லூரிகளில் சேர 3ஆம் கட்ட கலந்தாய்வு இன்று (8ஆம் தேதி) நடைபெற உள்ளது. மாணவரகள் இதனை பயன்படுத்தி பயன்பெறவும்.
Similar News
News December 6, 2025
தருமபுரி:30டன் ரேஷன் அரிசி கடத்தல் -ஒருவர் கைது!

பென்னாகரம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ர. (TN34V4487) சோதனை செய்தபோது பொக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகதிட்ட ரேஷன் அரிசி 600 முட்டைகளில் மொத்தமாக 30,000 கிலோ (30டன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த வாகனம் மற்றும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கைப்பற்றி சாமிசெட்டிப்பட்டி சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 6, 2025
தருமபுரி:போலி மருத்துவர் கைது!

தருமபுரி மருத்துவம் & ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில், போலி மருத்துவர்கள் ஒழிப்புக் குழுவினர் அதியமான்கோட்டையில் கிளினிக் வைத்து நடத்திவந்த ஒரு வீட்டில் நேற்று ஆய்வு செய்தனர்.அங்கு கணேசன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.மருத்துவக் குழுவினர் விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை படித்த நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை எடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர்.
News December 6, 2025
தருமபுரி:அரசு வழக்கறிஞர் (கல்பனா) லஞ்சம் வாங்கி கைது !

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யன் என்பவரின் மகளுக்கு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி வழக்கு அவரது தந்தையிடம் ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்ஸோ நீதிமன்ற அரசு வக்கீல் கல்பனா என்பரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று டிச-5 கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை.


