News January 1, 2025
அரூரில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

அரூர்-தர்மபுரி சாலை வனப்பகுதியையொட்டி உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, நேற்று அரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
தர்மபுரி: சித்திக்கு பாலியல் தொல்லை.. அடித்து கொன்ற தந்தை!

காரிமங்கலம், ஜொல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கரின் முதல் மனைவி மகன் சரவணன்(35), சித்தி சித்ராவுக்கு தொடர்ந்து பாலியல் வந்தார். இதனால் ஜெய்சங்கர்(தந்தை), மகன் கோவிந்தராஜ் மற்றும் அன்பரசு சேர்ந்து, 25ம் தேதி இரவு சரவணனை மேல் மாடியில் அடித்து கொலை செய்தனர். போலீசார் ஜெய்சங்கர் மற்றும் கோவிந்தராஜ், அன்பரசு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
தர்மபுரி: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

தர்மபுரியில் SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு. 1. <
News November 28, 2025
டிட்வா புயல்: தர்மபுரிக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) தர்மபுரிக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திருப்பத்தூரில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.


