News August 25, 2024

அரூரில் கஞ்சா பதுக்கி விற்று மூன்று பேர் கைது

image

அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவமனை முன்பு சந்தேகப்படும்படி இருந்த சக்திவேல், பரத், விநாயகம் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Similar News

News January 3, 2026

தருமபுரி: ஒரே நாளில் ரூ.2.80 கோடிக்கு மது விற்பனை சாதனை!

image

தருமபுரி மாவட்டத்தில் 66 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அவற்றின் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் மது விற்பனை வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ. 2 கோடியே 80 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது, என அறைவிப்பு.

News January 3, 2026

தருமபுரியில் பயங்கரம்: நேருக்கு நேர் மோதி விபத்து!

image

தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து மொரப்பூருக்கு நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று சென்றது. மொரப்பூர் மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே மொரப்பூர் சிங்காரவேலன் தோப்பு முனீஸ் வரன் கோயிலில் இருந்து, ஆம்பூர் நோக்கி சென்ற வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில், வேனில் பயணம் செய்த ஆம்பூர் கஸ்பாவே சின்னகம்மார தெருவை சேர்ந்த கவுரி, சரவணன், பங்கஜம், சாந்தி, கார்த்திகேயன், பிரியா, ஆகிய 6 பேர் காயமடைந்தனர்.

News January 3, 2026

தருமபுரி: இனி ஆதார் கார்டு வாங்க.. HI போடுங்க!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!