News August 25, 2024
அரூரில் கஞ்சா பதுக்கி விற்று மூன்று பேர் கைது

அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவமனை முன்பு சந்தேகப்படும்படி இருந்த சக்திவேல், பரத், விநாயகம் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
Similar News
News December 28, 2025
தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 28, 2025
தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தருமபுரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 28, 2025
தருமபுரி புதிய வாக்காளர்கள் இணையதள பதிவு செய்யலாம்

தருமபுரி;புதிய வாக்காளர்கள் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ”New votersRegistration” என்ற இணைய பக்கம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம்,ஏற்கனவே வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள தேவையில்லை தவறான தகவல் அளித்த வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு (ERO)அரசு பதிவுத்துறை செயலாளர் ஷீல்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.


