News May 17, 2024

அருவி போல் நீர் கொட்டும் அணைப்பிள்ளையார் அணை

image

போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை அருவி போல் நீர்க்கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News December 4, 2025

தேனி: டூ வீலர் வைத்திருப்போர் கவனத்திற்கு…மக்களே உஷார்

image

தேனியில் சமீப காலங்களாக குடியிருப்பு பகுதி, பேருந்து நிறுத்தம், சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இதேபோல் போடி, பழனிசெட்டிபட்டி, அல்லிநகரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் திருட்டு நடக்கிறது. ஆகையால் நள்ளிரவில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி CCTV காட்சிகளை சேகரித்து திருடர்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

News December 4, 2025

புத்தகத் திருவிழா லோகோ வடிவமைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

image

தேனி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து புத்தக திருவிழாவிற்கான இலட்சினையை (LOGO) கருத்துகளுடன் சிறந்த முறையில் வடிவமைத்து அனுப்பும் நபருக்கு ரூ.10,000‌ பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தயார் செய்த இலச்சினையை thenipro@gmail.com என்ற இணைய தள முகவரிக்கு நாளைக்குள் (05.12.2025) அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News December 4, 2025

தேனி: வாக்காளர் பட்டியலில் 1.30 லட்சம் பேர் நீக்கமா?

image

தேனி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 11.30 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று வரை இவர்களில் 11.27 லட்சம் பேருக்கு சிறப்பு திருத்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 9.67 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1.30 லட்சம் பேர் முகவரியில் வசிக்காதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!