News May 17, 2024

அருவி போல் நீர் கொட்டும் அணைப்பிள்ளையார் அணை

image

போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை அருவி போல் நீர்க்கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News November 28, 2025

டி.சுப்புலாபுரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

image

ஆண்டிபட்டி தாலுகா டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (நவ.29) காலை 10 மணி முதல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்கிறது. இம்முகாமில் பொது மருத்துவம், பெண்கள், குழந்தைகள் நலன், பல், கண், மன நல மருத்துவம், நுரையீரல், சர்க்கரை, நோய்களுக்கு சிகிச்சை ஆலோசனை, ரத்தம், சளி எக்கோ, அலட்ரா சோனோகிராம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.

News November 28, 2025

தேனி: முந்திரி சாகுபடி செய்ய ரூ.18 ஆயிரம் மானியம்

image

தேனி மாவட்டத்தில் 2600 ஹெக்டர் பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசு திட்டத்தில் 40 ஹெக்டர் பரப்பு முந்திரி சாகுபடி விரிவாக்கம் செய்ய தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு ஹெக்டர்க்கு ரூ.18,000 மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என தோட்டக்கலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

News November 28, 2025

பெரியகுளம்: சிறுமி கர்ப்பம் – 4 பேர் மீது போக்சோ

image

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பூர்த்தியடையாத சிறுமியிடம் சருத்துப்பட்டியை சேர்ந்த முத்தநாதன் (20) என்பவர் காதலிப்பதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இவர்களுக்கு அக்.24.ல் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த புகாரில் முத்துநாதன், அவரது தாய் அழகு தாய். சிறுமியின் தந்தை வஞ்சிக்கொடி. தாயார் பொன்னுமணி மீது பெரியகுளம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு (நவ.27) பதிவு.

error: Content is protected !!