News May 17, 2024
அருவி போல் நீர் கொட்டும் அணைப்பிள்ளையார் அணை

போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை அருவி போல் நீர்க்கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 13, 2025
தேனியில் தொழிலாளியை மிரட்டிய இளைஞர் கைது

போடி ஜமீன்தோப்பு தெருவை சோ்ந்தவா் கௌதம். இவரை ஒரு வழக்கில் காட்டிக்கொடுத்ததாக அதே பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரனை கல்லால் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் உள்ளது. இந்நிலையில் பிரபாகனிடம் புகாரை திரும்பபெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரபாகரன் சட்டை பையில் பணத்தை எடுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸாா் கௌதம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.
News December 13, 2025
தேனி: ஏலக்காய் வியாபாரிக்கு கொலை மிரட்டல்!

போடி சடையாண்டி தெருவை சேர்ந்த சதீஸ்குமாரும், சந்தைப்பேட்டை தெருவை சோ்ந்த நவீன்குமாரும் சோ்ந்து ஏலக்காய் வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில் நவீன்குமாா், சதீஸ்குமாரிடம் 500 கிலோ ஏலக்காய்களை வாங்கியுள்ளார். இதற்கான பணத்தை சதீஸ்குமாா் கேட்ட போது ஏற்பட்ட பிரச்சனையில் நவீன்குமாா், சதீஸ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போடி போலீஸாா் நவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை.
News December 13, 2025
தேனி: அரசு வேலை வேண்டுமா.. இங்க போங்க

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மத்திய அரசு நடத்தும் SSC, Bank, Railway ஆகிய தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் டிச.15 ம் (திங்கள்) தேதி தொடங்குகிறது. பயிற்சிக்கும் வரும் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பாடக்குறிப்பு, மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE IT


