News March 26, 2025
அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள்

அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது வரை சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய இக்கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
Similar News
News December 12, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News December 12, 2025
விருதுநகர்: ரேஷன் கார்டில் பிரச்னையா… இங்க போங்க

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை 13ம் தேதி ரேஷன் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை முதல் மாலை வரை நடைபெறும் இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்று பயனடையலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 12, 2025
சிவகாசி: இளம் பெண்ணிடம் அத்துமீறிய அக்கா கணவர்

சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரின் அக்காவின் கணவரான மாரீஸ்வரன் (37) என்பவர் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இளம்பெண் கூச்சலிட்டதால் மாரீஸ்வரன் இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இளம்பெண் புகாரில் மாரீஸ்வரன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.


