News March 26, 2025

அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள்

image

அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது வரை சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய இக்கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

Similar News

News December 15, 2025

விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் வரும் டிசம்பர் 19ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம் மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

விருதுநகரில் கத்தியால் குத்தியவருக்கு மாவுகட்டு

image

விருதுநகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கார்த்திக்குமார் 42 என்பவரை அல்லம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன், மணிகண்டன் மற்றும் மற்றொரு நபர் கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்றனர். இவ்வழக்கில் செல்வத்தை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் மாலை தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்யும் போது சுவரில் ஏறி தப்பியோட முயன்று கீழே விழுந்து கை, கால் முறிந்ததால் விருதுநகர் GH-ல் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

News December 15, 2025

விருதுநகர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

விருதுநகர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04562-252678) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!