News March 26, 2025
அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள்

அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது வரை சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய இக்கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
Similar News
News November 8, 2025
சிவகாசி மக்களே; தவறவிடாதீங்க!

சிவகாசி ஐயப்பன் கோயில் வளாகத்தில் வைத்து வரும் 10, 11 ஆகிய 2 நாட்கள் இலவச புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண், பெண் இருபாலருக்குமான புற்றுநோய் கண்டறியும் சோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் 9443125930, 9443378412, 9843024209 ஆகிய அலைப்பேசி எண்களுக்கு அழைத்து முன்பதிவு செய்யலாம்.
News November 8, 2025
சிவகாசி: 134 பேர் பலி.. நடவடிக்கை தேவை

சிவகாசி பகுதியில் இன்னும் சில தினங்களில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக தொடங்க உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேலான பட்டாசு விபத்துகளில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பட்டாசு தொழிலை முடக்காமல், மத்திய, மாநில அரசுகள் பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களை கட்டுப்படுத்தி தவறுகளை சரி செய்ய நவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக வலுத்து வருகிறது.
News November 8, 2025
விருதுநகர்: 10th தகுதி.. ரூ.50,400 சம்பளத்தில் வேலை., APPLY NOW

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <


