News December 6, 2024
அரியலூர்: 1.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழங்கியதை தொடர்ந்து ஜெயங்கொண்டம் சுபம் மஹாலில் தலைவர் திரு.பொ. ரத்தினசாமி அவர்களின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 19, 2025
அரியலூர்: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

அரியலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
அரியலூரில் இப்படியான இடங்களா!

1.வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்: இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது.
2. விக்கிரமங்கலம் புத்தர் சிலைகள்: சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் பாதுகாக்கப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.
News October 19, 2025
அரியலூர்: நெல் சேமிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தேளுர் ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நெல் இருப்பினை தொடர்ந்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், நெல் மூட்டைகள் நிலையத்திற்கு வரும் போதும் மற்றும் அவை பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்போதும் எடைகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.