News April 17, 2025

அரியலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

சிறப்பாக செயல்படக்கூடிய சமுதாய அமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் 2024-2025-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வரும் 30ஆம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாமென ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

அரியலூர்: பசுமை சாம்பியன் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

image

சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.tnpcp.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News November 24, 2025

அரியலூர்: ஒரே ஆண்டில் இவ்வளவு வழக்கா?

image

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தை திருமணத்தால் சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 2025-ம் ஆண்டு மட்டும் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ குறித்த 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

News November 24, 2025

அரியலூர்: மாநில சிறுபான்மையினர் குழு ஆய்வு கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலதுறையின் சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில், சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி முன்னிலை நடைப்பெற்றது. இதில் மாநில சிறுபான்மையின ஆணைய தலைவரிடம் வழங்கபட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நிகழ்வு நடைபெற்றது.

error: Content is protected !!