News January 24, 2025

அரியலூர்: போதுமான அளவு உரங்கள் கையிருப்பு

image

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3082 மெ.டன் யூரியா, 852 மெ.டன் டி.ஏ.பி 1023 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1416 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் அரசு தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் 358.69 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

அரியலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

அரியலூர் மாவட்டத்தில் மழையால் 26 வீடுகள் சேதம்

image

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே டிட்வா புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 16 குடிசை வீடுகள் பகுதி அளவும், 10 காரை வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(டிச.1) காலை 10 மணி முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!