News September 12, 2024
அரியலூர்-போட்டித் தேர்வை கண்காணிக்க குழுக்கள்

அரியலூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2,2ஏ முதல் நிலை தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை, 08 இயங்கு குழுக்கள் 29 ஆய்வு அலுவலர்கள், 29 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News October 23, 2025
அரியலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

அரியலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News October 23, 2025
அரியலூர்: ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நேரம் மாற்றம்

அரியலூர் மாவட்டத்தில் வரும் 24ம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் 24ம் தேதி மாலை 03.00 மணியளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.