News March 20, 2024
அரியலூர்: பொது ஏலம் ஒத்திவைப்பு

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 21-ல் பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல் துறை அறிவித்திருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொது ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News September 19, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செந்துறை வட்டாரத்தில் உள்ள குமிழியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம், குமிழியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் (செப்.20) நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் சிறப்பு மருத்தவர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
அரியலூர்: இரவு நேர ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
News September 18, 2025
அரியலூர்: தேர்வு இல்லாமல் ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

அரியலூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..