News April 22, 2025

அரியலூர்: பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தல்

image

அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பொறுப்பு ஆணையர் அசோக்குமார் பேசும்போது, “அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். தமிழ் பெயர் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்” என கூறினார்.

Similar News

News November 28, 2025

அரியலூர்: அவசர உதவி எண்கள்!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

அரியலூர்: பணியை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

image

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், அதனைக் கொண்டு வருவதை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

அரியலூர்: மகன் மற்றும் தாய்க்கு சிறை தண்டனை

image

அரியலூர் அழகப்பா நகரைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது தாய் கண்ணகி ஆகியோர் தங்களது வீட்டை விற்பதாக கோரி ஆசிரியர் ஜெயாவிற்கு 43.30 இலட்சம் பெற்றுக் கொண்டு, கிரையம் எழுதி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து ஜெயா அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் செந்தில்குமார் கண்ணகி ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.

error: Content is protected !!