News August 24, 2024

அரியலூர் பயனாளிகளிடம் தொடர்பு கொண்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்டத்தில் பயனடைந்து வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரடியாக தொலைபேசி வாயிலாக திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார். கலைஞர் உரிமைத்தொகை பல்வேறு திட்டங்களில் உதவித்தொகை கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி மூலம் பேசி திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

Similar News

News November 8, 2025

அரியலூர்: இரண்டாம் நிலை தேர்வு அறிவிப்பு!

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான, பொதுத்தேர்வு வரும் (09.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

News November 8, 2025

அரியலூர்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

News November 8, 2025

அரியலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233137>>பாகம்-2<<>>)

error: Content is protected !!