News April 24, 2025

அரியலூர்: தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் உயிரிழப்பு

image

கீழப்பழுவூர் அருகேயுள்ள திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார்(35), மனைவி சூர்யா(31), மகன் ரட்சகன்(11) உடன் வசித்து வந்த நிலையில், சூர்யா தனது மகனுடன் மாடு மேய்க்க அருகே உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள தரை கிணற்றில் எதிர்பாராதவிதமாக சூர்யா தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட, சிறுவன் ரட்சகன், தனது தாயை காப்பாற்ற கிணற்றில் குதித்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

Similar News

News November 23, 2025

அரியலூர்: சரக்கு வாகனம் மோதி விபத்து

image

அரியலூர் மாவட்டம், வீரசோழபுரம் பேருந்து நிலையம் அருகில், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற சரக்கு வகான ஓட்டுனர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் சைக்கிளில் வந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News November 23, 2025

அரியலூர்: சரக்கு வாகனம் மோதி விபத்து

image

அரியலூர் மாவட்டம், வீரசோழபுரம் பேருந்து நிலையம் அருகில், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற சரக்கு வகான ஓட்டுனர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் சைக்கிளில் வந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News November 23, 2025

அரியலூர்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!