News April 24, 2025
அரியலூர்: தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் உயிரிழப்பு

கீழப்பழுவூர் அருகேயுள்ள திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார்(35), மனைவி சூர்யா(31), மகன் ரட்சகன்(11) உடன் வசித்து வந்த நிலையில், சூர்யா தனது மகனுடன் மாடு மேய்க்க அருகே உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள தரை கிணற்றில் எதிர்பாராதவிதமாக சூர்யா தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட, சிறுவன் ரட்சகன், தனது தாயை காப்பாற்ற கிணற்றில் குதித்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.
Similar News
News August 11, 2025
அரியலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

அரியலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 7 உதவியாளர்கள் மற்றும் 21 எழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <
News August 11, 2025
அரியலூர்: 617 மது பாட்டில்கள் பறிமுதல்-வாலிபர் கைது!

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 617 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News August 11, 2025
அரியலூர் மாவட்டம் ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண், SSI சிவராஜ்-9498165521. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!