News March 28, 2024

அரியலூர்: தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்

image

அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்  திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

Similar News

News December 19, 2025

அரியலூர்: மணல் திருட்டிய 6 பேர் கைது

image

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் போலீசார் வெற்றியூர் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஓடையில் மண் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்று பார்த்தபோது 3 டிராக்டர்களில், 6 பேர் சேர்ந்து மணல் திருடுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து, 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர்களுடன் விசாரணை நடத்திவருகின்றனர்.

News December 19, 2025

அரியலூர்: காவல் வாகனங்களை ஆய்வு செய்த SP

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) விஷ்வேஷ் பா சாஸ்திரி காவல் அலுவலகத்தில் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் காவல்துறையினர், தலைக்கவசம் மற்றும் ஒளிரும் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் பூட்டி இருக்கும் வீடுகள் முன்பு சந்தேகத்திற்கு இடமான செயல்கள் நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News December 19, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!