News March 27, 2024

அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

image

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Similar News

News November 22, 2025

அரியலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

image

அரியலூர் மாவட்டம் வீரபோகம் நடுத்தெருவை சேர்ந்தவர் அனிதா. இவர் கல்லூரி படித்துவிட்டு, தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்காக படித்து வருகிறார். இந்நிலையில், அனிதாவின் அண்ணனான அருண் சம்பத்துக்கு பழக்கமான 2 பேர். ரூ.12 லட்சம் கொடுத்தால் அனிதாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 2018 தேர்வெழுதிய அனிதாவும் 10 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து மீன்சுட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

News November 22, 2025

அரியலூர்: சரக்கு வாகனம் மோதி விபத்து

image

அரியலூர் மாவட்டம், வீரசோழபுரம் பேருந்து நிலையம் அருகில், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற சரக்கு வகான ஓட்டுனர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் சைக்கிளில் வந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News November 22, 2025

அரியலூர்: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

வெங்கனூரை சேர்ந்வர் கவியரசன்(23). இவர் மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வெங்கனூர் காவல் நிலையம் முன்பு, போலீசாரை தாக்கி கத்தியால் கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரை பேரில் கலெக்டர் ரத்தினசாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!