News March 27, 2024
அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: தீப்பிடித்து எரிந்த கொட்டகை!

சூசையப்பர்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த லாரன்ஸ் (40). விவசாயியான இவருக்கு மேற்கூரையாக கொண்ட கொட்டகை ஒன்று உள்ளது. இதில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென அந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த கொட்டகையில் இருந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், சைக்கிள் மற்றும் உரமூட்டைகள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இது குறித்த புகாரின் பெயரில் உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு 10 மணி முதல் இன்று (நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 7, 2025
அரியலூர்: முதியோர் இல்லங்களில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் ராஜாஜி நகர் மற்றும் கொல்லாபுரத்தில் உள்ள முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், முதியோர்கள் பொழுது போக்குவதற்கான வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்த ஆட்சியர், முதியோர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


