News March 27, 2024

அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

image

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Similar News

News December 1, 2025

அரியலூர் மாவட்டத்தில் மழையால் 26 வீடுகள் சேதம்

image

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே டிட்வா புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 16 குடிசை வீடுகள் பகுதி அளவும், 10 காரை வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(டிச.1) காலை 10 மணி முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 1, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (நவ.30) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!