News March 27, 2024

அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

image

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Similar News

News November 27, 2025

அரியலூர்: அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் நலம்காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் வருகிற நவ.29 தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

அரியலூர்: பெண் உட்பட இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார்,. இவர் தனது பெண் தோழியான பாஞ்சாலையுடன் சேர்ந்து கடந்த நவ.16ஆம் தேதி வங்காரம் காட்டுப் பகுதியில், மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வழக்கில், தளவாய் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்பி பரிந்துரையின் பெயரில், ஆட்சியர் ரத்தினசாமி இருவர் மீதும் குண்டாஸ் சட்டம் பிறப்பித்தார்.

News November 27, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (நவ.26) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!