News March 19, 2024
அரியலூர்: சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, சிறுவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மற்றொரு 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடி

வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். அதிலும் குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News July 11, 2025
அரியலூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ தமிழகத்தில் நாளை 13.8 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
அரியலூர்: மாணவர்களுக்கு திறன் பயிற்சி அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஜூலை 14 வரை நடைபெறவுள்ளன. ஆகவே, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூலை 14-ம் தேதி அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE செய்ங்க.