News September 13, 2024
அரியலூர்- கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கறவை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்தும், புரூசெல்லோசிஸ் நோய்க்கான 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே 8 மாதம் வயதுடைய கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
அரியலூர்: சரக்கு வாகனம் மோதி விபத்து

அரியலூர் மாவட்டம், வீரசோழபுரம் பேருந்து நிலையம் அருகில், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற சரக்கு வகான ஓட்டுனர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் சைக்கிளில் வந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News November 22, 2025
அரியலூர்: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

வெங்கனூரை சேர்ந்வர் கவியரசன்(23). இவர் மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வெங்கனூர் காவல் நிலையம் முன்பு, போலீசாரை தாக்கி கத்தியால் கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரை பேரில் கலெக்டர் ரத்தினசாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
News November 22, 2025
அரியலூர்: பைக்கில் சாகசம் – 2 இளைஞர்கள் கைது

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆனந்தவாடி பிரிவு சாலையில் பொதுமக்கள் செல்லும் பாதையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி சாகசத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் மீது இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, 2 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


