News April 28, 2025
அரியலூர்: ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை ஒட்டி மே 1ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சுய உதவி குழு பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.
News November 15, 2025
அரியலூர் நூறாவதாக பிரசவித்த தாய்க்கு நினைவு பரிசு

அரியலூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று முதல் செயல்பட தொடங்கியது. இங்கு நடைபெற்ற பிரசவங்கள் அனைத்தும் சுகப்பிரசவமாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூறாவதாக பிரசவித்த தாய் மற்றும் சேய்க்கு நினைவு பரிசை மாவட்ட சுகாதார அலுவலர் மணிவண்ணன் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 15, 2025
அரியலூர்: டிகிரி போதும்..பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <


