News August 24, 2024

அரியலூர் ஆட்சியர் அழைப்பு

image

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும் மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6ம் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News December 23, 2025

அரியலூர்: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

image

அரியலூர் மக்களே., SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 23, 2025

அரியலூர்: 7 1/2 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட போலீசார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் மட்டும் 36 கஞ்சா வழக்குகள் போடப்பட்டு 7.115 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் 7.472 கிலோ கஞ்சா நேற்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தீ வைத்து அழிக்கப்பட்டது.

News December 23, 2025

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 26.12.2025 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!