News August 24, 2024
அரியலூர் ஆட்சியர் அழைப்பு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும் மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6ம் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 14, 2025
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சென்னை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் ஒப்புதலின்படி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் 16-ம் தேதி ஆண்டிமடம் தனியார் பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று முகாம் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
News December 14, 2025
அரியலூர்: ரூ.96,210 சம்பளம்..வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 14, 2025
அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில், டிசம்பர் 17-26 வரை 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம் காலை 10-12.30மணி வரை கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் இறுதி நாளான டிச.26 அன்று பொதுமக்கள் ஆட்சிமொழிச் சட்டத்தை அறியும் வகையில் விளம்பர பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


