News August 24, 2024
அரியலூர் ஆட்சியர் அழைப்பு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும் மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6ம் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News January 9, 2026
அரியலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

அரியலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News January 9, 2026
அரியலூர்: 2.51 லட்ச குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

அரியலூர் மாவட்டத்தில், ரேஷன் அட்டையாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் ஜன.8 தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, ரூ.3,000 ரொக்கம், விலையில்லா வேட்டி, சேலைகள் மற்றும் பரிசுத் தொகுப்புகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் 481 நியாய விலைக்கடைகளில் 2,51,161 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
News January 9, 2026
அரியலூர்: மின்சார பிரச்சனையா? தீர்வு இதோ!

அரியலூர் மக்களே உங்க வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


