News August 24, 2024

அரியலூர் ஆட்சியர் அழைப்பு

image

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும் மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6ம் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News November 26, 2025

அரியலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு அரியலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04329-223333) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News November 26, 2025

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 26, 2025

அரியலூர்: மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தினை<> www.tnpcp.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என என்று ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!