News August 7, 2024

அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காரீப் பருவத்தில் 2023-24ஆம் ஆண்டு சாகுபடி செய்த நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக்கணக்குடன் அருகிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை அணுகுமாறு அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News December 10, 2025

அரியலூர்: 69 பேர் மீது வழக்கு பதிவு

image

அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரி உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் மது அருந்திய 41 பேர், மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக 14 பேர், சட்டவிரோதமாக மது விற்றதாக 7 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News December 10, 2025

அரியலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.

News December 10, 2025

அரியலூர்: சட்ட விரோத மது விற்பனை-ஒருவர் கைது

image

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நக்கம்பாடி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் இருவரும், அரசு மதுபான பாட்டில்களை வீட்டின் பின்புறம், சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சோதனையில் 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!