News March 16, 2025
அரியலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு பாத சிகிச்சை பிரிவு தொடக்கம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீரிழிவு பாத மருத்துவ திட்டம் மூலம், அரியலூர் அரசு மருத்துவமனையில் பாத சிறப்பு சிகிச்சை பிரிவு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நீரிழிவு நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறலாமென மருத்துவமனையின் டீன் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இத்தகவலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News April 19, 2025
குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரைச் சேர்ந்த விக்னேஷ்ராஜ்(26) மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் 18ஆம் தேதி சிற்றுந்து ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என்ற காரணத்தால், கீழப்பழூர் காவல் ஆய்வாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News April 18, 2025
இரவு ரோந்து போலீசாரின் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள போலீசாரின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 18, 2025
அரியலூர் – ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.