News January 2, 2025
அரியலூரில் 34 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை, மது விற்பனை, மோசடி, பாலியல் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2023ஆம் ஆண்டில் இதேபோல் மொத்தம் 28 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 19, 2025
அரியலூர்: விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரி சாலை பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் உடலை கைப்பற்றி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், நேற்று (நவ.18) மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமியை சந்தித்து, ஜெயங்கொண்டம் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு பணி (S.I.R) குறித்தும், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன் உடனிருந்தார்.
News November 19, 2025
அரியலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல், இன்று(நவ.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


