News April 15, 2024
அரியலூரில் 2 சிறுத்தகள் நடமாட்டமா?

அரியலூர் மாவட்டம், செந்துறையில் சிறுத்தை ஒன்று உலவி வந்த நிலையில், அதை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் இரட்டை சிறுத்தை இருப்பதாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தவறான செய்தி தொடர்பாக, காவல்துறையில் வனத்துறை சார்பில் புகார் அளித்துள்ளது. இதில் தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
Similar News
News November 27, 2025
அரியலூரில் மின்தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் கீழபழுர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.28) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே கீழபழுர் மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பொய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.
News November 27, 2025
அரியலூர்: அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் நலம்காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் வருகிற நவ.29 தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
அரியலூர்: பெண் உட்பட இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார்,. இவர் தனது பெண் தோழியான பாஞ்சாலையுடன் சேர்ந்து கடந்த நவ.16ஆம் தேதி வங்காரம் காட்டுப் பகுதியில், மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வழக்கில், தளவாய் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்பி பரிந்துரையின் பெயரில், ஆட்சியர் ரத்தினசாமி இருவர் மீதும் குண்டாஸ் சட்டம் பிறப்பித்தார்.


