News April 15, 2024

அரியலூரில் 2 சிறுத்தகள் நடமாட்டமா?

image

அரியலூர் மாவட்டம், செந்துறையில் சிறுத்தை ஒன்று உலவி வந்த நிலையில், அதை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் இரட்டை சிறுத்தை இருப்பதாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தவறான செய்தி தொடர்பாக, காவல்துறையில் வனத்துறை சார்பில் புகார் அளித்துள்ளது. இதில் தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Similar News

News November 28, 2025

அரியலூர்: அவசர உதவி எண்கள்!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

அரியலூர்: பணியை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

image

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், அதனைக் கொண்டு வருவதை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

அரியலூர்: மகன் மற்றும் தாய்க்கு சிறை தண்டனை

image

அரியலூர் அழகப்பா நகரைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது தாய் கண்ணகி ஆகியோர் தங்களது வீட்டை விற்பதாக கோரி ஆசிரியர் ஜெயாவிற்கு 43.30 இலட்சம் பெற்றுக் கொண்டு, கிரையம் எழுதி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து ஜெயா அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் செந்தில்குமார் கண்ணகி ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.

error: Content is protected !!