News August 9, 2024

அரியலூரில் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது

image

ஜெயங்கொண்டத்தில் பத்திரப் பதிவுக்கு ரூ.1500 லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவு அலுவலர் பிரகாஷ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரசாயனம் தடவிய பண நோட்டுகளை பெற்றபோது மறந்திருந்த லஞ்சஒழிப்பு துறை போலீசார் அலுவலக உதவியாளர் சக்திவேல், பதிவு அலுவலர் ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்தனர்.பின்பு பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து போலீசார் புகார் மனுவை பெற்று விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

அரியலூர்: விவசாய நிலங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

image

அரியலூர் வட்டாரத்தில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அஸ்தினாபுரம் பகுதியில் நிலங்களை வேளாண்மை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சம்பா நெல் பயிரை அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி பராமரிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

News December 4, 2025

அரியலூர்: கருத்தடை செய்தால் ஊக்கத்தொகை

image

அரியலூர் மாவட்டத்தில், ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளிய முறையிலும், தையல்-தழும்பு-வலியின்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும். இதில் கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளார்கள். மேலும் அரசின் சார்பில் ஊக்க தொகையாக ரூ.1100/-, ஊக்குவிப்போருக்கு ரூ.200/- அன்றே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.03) இரவு 10 மணி முதல் இன்று (டிச.04) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!