News April 12, 2025

அரியலூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று சூறைக் காற்றுடன் விடாமல் கனமழை கொட்டித்தீா்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டோடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. மேலும், விளம்பர பதாகைகள் சாலையில் தூக்கி வீசப்பட்டன.

Similar News

News April 17, 2025

அரியலூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

அரியலூர் மாவட்டத்தின் அருகாமை மாவட்டமான பெரம்பலூரில், தனியார் டிராக்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 17, 2025

அரியலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

சிறப்பாக செயல்படக்கூடிய சமுதாய அமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் 2024-2025-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வரும் 30ஆம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாமென ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

அரியலூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் http://tnrd.tn.gov.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!