News April 9, 2025
அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News October 26, 2025
அரியலூர்: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்ங்க..
News October 26, 2025
அரியலூர்: பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள்!

அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பருத்தி பயிருக்கு காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.558.5 செலுத்த வேண்டும். இதற்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அக்.31-ம் தேதி ஆகும். ரபி பருவத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்யும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.577.5 செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 15-ம் தேதி ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
அரியலூர்: காவல் நிலையங்களில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (அக்.25) தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வினை நடத்தினார். ஆய்வின்போது சட்டவிரோத செயல்கள் மற்றும் பொதுமக்கள் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாஷா, உதவி ஆய்வாளர் தனஞ்செழியன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


