News April 2, 2025

அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

Similar News

News November 13, 2025

அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டம், தத்தனுர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் நவ.18-ம் தேதி காலை 10மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளன. மேலும் விபரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 13, 2025

அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டம் தா.பழூர் தாலுகா நடுவலூர் பாரத மாதா ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அணைத்து தரப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர், அதேபோல், அமைப்புசாரா தொழில் நலவாரிய பணியாளர்களும் உரிய ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News November 13, 2025

அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு தெரியுமா?

image

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். இப்படியாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளது.

error: Content is protected !!