News August 25, 2024
அரவைக்காக 2,000 டன் நெல் மதுரைக்கு அனுப்பி வைப்பு

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2,000 டன் நெல் அரவைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Similar News
News September 19, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.18) இரவு 10 மணி முதல் இன்று(செப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு வெடிபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
News September 18, 2025
தஞ்சாவூர் மக்களே… தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தஞ்சாவூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க…!