News August 26, 2024
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; தம்பதி கைது

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிழக்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ராஜா(46). இவர், இவரது மனைவி பத்மா & செங்கோட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக தனித்தனி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாரிமுத்து ராஜா, பத்மாவை நேற்று(ஆக.,25) போலீசார் கைது செய்தனர். சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
தென்காசி கோர விபத்து; லாரி ஓட்டுநர் கைது!

தென்காசி மாவட்டம், சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு, மனைவி உஷா, சுரண்டை நகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் மற்றும் பிளஸ்சி நேற்று ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரி, பைக் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் லாரி டயரில் சிக்கி உயிரிழந்தனர். குலையநேரியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் 30, என்பவரை, சுரண்டை போலீசார் கைது செய்தனர்.
News December 1, 2025
தென்காசியில் விண்ணை தொட்ட மல்லிகை பூ விலை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் மல்லிகை, பிச்சி, முல்லை, கனகாம்பரம், மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் சந்தைக்கு வருகின்றன. முகூர்த்த நாள் மற்றும் கேரளாவுக்கு அதிக ஏற்றுமதி காரணமாக, மல்லிகைப் பூ விலை திடீரென உயர்ந்துள்ளது. சங்கரன்கோவிலில் நேற்று மல்லிகை கிலோ ₹7,500 வரை விற்பனையானது.
News November 30, 2025
தென்காசி : இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தென்காசி மாவட்ட மக்களே, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.


