News August 26, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; தம்பதி கைது

image

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிழக்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ராஜா(46). இவர், இவரது மனைவி பத்மா & செங்கோட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக தனித்தனி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாரிமுத்து ராஜா, பத்மாவை நேற்று(ஆக.,25) போலீசார் கைது செய்தனர். சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News November 27, 2025

தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 27, 2025

தென்காசி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

தென்காசி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க

News November 27, 2025

தென்காசி: உள்ளே செல்ல அனுமதி இல்லை – வனத்துறை

image

செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது வனத்துறை சார்பில் அவ்வழியே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று குற்றாலம் வனச்சரகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!