News August 26, 2024
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; தம்பதி கைது

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிழக்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ராஜா(46). இவர், இவரது மனைவி பத்மா & செங்கோட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக தனித்தனி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாரிமுத்து ராஜா, பத்மாவை நேற்று(ஆக.,25) போலீசார் கைது செய்தனர். சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
தென்காசி மாவட்டத்தில் மின்தடையா? கால் பண்ணுங்க…

தென்காசி மாவட்ட மக்கள், மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், (TNPDCL OFFICIAL APP) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சமூக வலைதளங்கள், திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 மூலம் தகவல் தெரிவிக்கலாம்
News November 22, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News November 22, 2025
தென்காசி மண்டலத்திற்கு தனியார் வாடகை கார் அழைப்பு

தென்காசி மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் துணை இயக்குநர் அலுவலகத்திற்கும் கால்நடை நிலையங்களை ஆய்வு செய்யவும், கால்நடை பராமரிப்புத்துறை சம்மந்தமான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் தனியார் வாடகை கார் அல்லது ஈப்பு தேவைக்கு போட்டி விலைப்பட்டியல் 27.11.2025க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


