News August 26, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; தம்பதி கைது

image

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிழக்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ராஜா(46). இவர், இவரது மனைவி பத்மா & செங்கோட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக தனித்தனி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாரிமுத்து ராஜா, பத்மாவை நேற்று(ஆக.,25) போலீசார் கைது செய்தனர். சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

தென்காசியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

image

விஸ்வநாதப்பேரி துணைமின், மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி உபமின், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும். சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி மற்றும் விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

News September 19, 2025

தென்காசி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 19, 2025

சங்கரன்கோவிலில் ராணுவ வீரர் பலி

image

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அழகாபுரி பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன் (வயது 35). இவர் ராணுவ வீரர். இவர் நேற்று (செப் 18) மானூர் அருகே சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர பள்ளத்தில் தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!